திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம்வரை சந்தை நடைபெறும். சந்தையில் மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகம், கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருவர்.
கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். நேற்று கூடிய மாட்டு சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து பால்மாடுகள், இறைச்சி மாடுகள், காளை மாடுகள் என அதிகளவில் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழக உள் மாவட்டங்களில் மாடுகளை வாங்க குறைவான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வெளி மாநிலங்களுக்கு மாடுகள் விற்பனை குறைந்து போனது.
கர்நாடகா, கேரளாவில் தொடர் மழையின் காரணமாக அங்கிருந்து குறைவான வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். இதனால் மாடுகளின் விலை குறைந்தது. இறைச்சி மாடுகள் ரூ.25 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ரூ.45 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையானது. மொத்தம் ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
The post புதன்சந்தையில் ரூ.2.50கோடிக்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.
