பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது, ‘‘கடந்த நான்கு ஆண்டு திமு.க ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக இதுவரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 87 இளநிலை உதவியாளர்கள், 108 பண வசூலாளர்கள், 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 101 உதவி பொறியாளர்கள், 10 சமுதாய அலுவலர்கள், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் 12 பேர் என மொத்தம் 325 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா சிங், வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன், தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, லால் பகதூர், உதவி செயலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணவேனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post 44 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.
