சென்னை: தமிழ்நாடு துணை தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ-மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது. இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுமாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post மழலைகளின் மரணம் துயரையும், வேதனையையும் தருகிறது; விபத்துகள் இனியும் தொடராத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
