வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டபோது சாருமதி என்ற மாணவி உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது. இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். உடனடியாக மாணவன் நிவாஸ் உடலும், மாணவி சாருமதி உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. செழியன் (வயது15), விஸ்வேஸ் (16) என்ற 2 மாணவர்களும் படுகாயங்களுடன் வேனுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த கோர விபத்தில் உயிரிழந்த சாருமதியும் செழியனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி என்பது மிகவும் சோகமாகும். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட மணி என்பவரின் மகள் சாருமதி, மகன் செழியன் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி உயிரிழப்பு… பள்ளி வேன் மீது ரயில் மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு appeared first on Dinakaran.
