திருப்பூர், ஜூலை 8: திருப்பூர், விஜயாபுரம் அடுத்த காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் பாபு (65). இவர் கடந்த 5ம் தேதி வியாபாரம் முடித்து விட்டு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து கடையை திறக்க முயன்ற போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post மளிகை கடையில் ரூ.12 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.
