கேரளாவில் நிபா வைரஸ் பரவல் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள மாநிலத்தில், பாலக்காடு உட்பட 3 மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. மலப்புரத்தை சேர்ந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன்பு நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஒட்டி பாலக்காடு மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழைபவர்களை கண்காணிக்கும் வகையில், மாநில எல்லையில் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கேரளாவில் நிபா வைரஸ் பரவல் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: