பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது

சென்னை: பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து பழங்குடியினர் நல இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு நாளை (9ம் தேதி) காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம் / பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: