இந்நிலையில் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது எனக் கூறி தனியார் நிறுவனத்திடமிருந்து நிலத்தை காங்கிரஸ் அறக்கட்டளை கையகப்படுத்தியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தனியார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவன தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு நிலுவையில் இருக்கும் போது, சம்பந்தப்பட்ட நிலத்தை காங்கிரஸ் அறக்கட்டளை சுவாதீனம் எடுத்துக் கொண்டு விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே, வழக்கை திரும்ப பெற அனுமதியளிக்க வேண்டும் என்று கோரினார். இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
The post காங்கிரஸ் அறக்கட்டளை நிலம் விவகாரம் தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
