சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ல் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும். இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதால் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
The post அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் கோவி.செழியன் appeared first on Dinakaran.
