ஆனால் இதுகுறித்து அறிந்த கமிஷனர் இளங்கோ, ‘‘நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். என்னுடைய பெயரை நீக்கிவிடுங்கள்’’ என அப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பெயர் பலகையை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்தினர். திருச்சூர் ரவுடிகளை தெறிக்கவிட்ட இளங்கோவின் சொந்த ஊர், தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் ஆகும். இவர் 2015ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இதுகுறித்து திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோவிடம் கேட்டபோது, ‘‘ மக்களுக்கு சேவை செய்வதுதான் அதிகாரிகளின் கடமை. பெயர், புகழுக்காக எதையும் செய்யக்கூடாது’’ என்றார்.
The post ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்கினார்; திருச்சூர் ரவுடிகளை தெறிக்கவிட்ட திண்டுக்கல் ஐபிஎஸ் அதிகாரி: ஊருக்கு பெயர் வைத்து கேரள மக்கள் உற்சாகம் appeared first on Dinakaran.
