இந்நிலையில், இதே வழக்கில் சம்மந்தப்பட்ட நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி (46) அமெரிக்காவில் பதுங்கியிருப்பது தெரியவந்த நிலையில் அவரை நாடு கடத்த சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேஹல் மோடியை அமெரிக்க போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். நேஹல் மோடி மீது 2 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை வரும் 17ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. அப்போது நேஹல் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ரூ.13,000 கோடி கடன் மோசடி நீரவ் மோடி சகோதரர் அமெரிக்காவில் கைது: சிபிஐ, ஈடி கோரிக்கையால் அதிரடி appeared first on Dinakaran.
