மும்பை: மும்பையில் உத்தவ் தாக்கரே, ராஜ் ராக்கரே இணைந்து பங்கேற்கும் பேரணி இன்று நடைபெறுகிறது. மராட்டியம், ஆங்கிலத்துடன் இந்தி கற்பது கட்டாயம் என்ற அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கடும் எதிர்ப்பை அடுத்து மராட்டிய பாஜக அரசு அறிவிப்பை வாபஸ் பெற்ற நிலையில் இன்று வெற்றிப் பேரணி நடைபெறுகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து பங்கேற்க உள்ளனர்.
The post மும்பையில் உத்தவ், ராஜ் தாக்கரே இன்று பேரணி..!! appeared first on Dinakaran.