இதில்தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அதனால், ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் மேலும் கால அவகாசம் வேண்டும் என்றும், எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்தவோம், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என்று கோரினார். அப்போது ஓபிஎஸ் மற்றும் பெங்களூர் புகழேந்தி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, தங்கள் தரப்புக்கு மனுவின் நகல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு நகல்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்களின் விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம்: உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை appeared first on Dinakaran.
