அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு பதில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் எனத் தெரிவித்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்கும்படி அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து பிற்பகலில் தவெகா வழக்கறிஞர் ஆஜராகி, மனு எண்ணிடப்பட்டுள்ளது வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளது. உங்களுக்கு ஏன் அவசரம்? உங்களுக்கான வேலையை மட்டும் தான் காவல்துறை பார்க்க வேண்டுமா? காவல்துறைக்கு அழுத்தம் தரவேண்டாம், அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக கடிதம் தர வேண்டும். கூட்டம் நடத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் காவல்துறைக்கு கால அவகாசம் தாருங்கள். காவல்துறைக்கு மீண்டும் மனு அளிக்க வேண்டும். காவல்துறை அந்த மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post இளைஞர் கொலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு குற்றத்தை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: தவெகவினருக்கு ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.
