மக்கள் அதிகாரம் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்


சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அதிகாரம் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது என்றும் கூறியுள்ளது. 2016-ல் சிதம்பரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. சேத்தியாத்தோப்பு போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post மக்கள் அதிகாரம் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: