கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூரில் நடைபெற்று வரும் குக்கி – மைதேயி இன கலவரம், இந்த 2 இளம்பெண்களின் இறப்பால் மங்கியுள்ளது. அவர்கள் வானத்தின் தேவதைகள். அவர்களது மரணம், 2 இனங்களை ஒன்றிணைக்க உதவியுள்ளது. இந்த மனித உயிர் எத்தனை அரியது என்பதை அவர்களுக்கு உணர்த்தி உள்ளது. வாழும் வரை அமைதியாக ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை அவர்களுடைய மரணங்கள் உணர்த்தி உள்ளது’’ என்றார். இதற்கிடையில், லாம்நந்தியம், கந்தோய் ஆகியோரது குடும்பத்தினர் அகமதாபாத்துக்கு சென்று, உடல்களை அடையாளம் காண, டிஎன்ஏ பரிசோதனைக்காக தங்கள் ரத்த மாதிரிகளை வழங்கினர். உயிரிழந்த லாம்நந்தியம் சிங்சன் குடும்பத்தில் அவர் மட்டும்தான் வருவாய் ஈட்டுபவராக இருந்துள்ளார். இவரது குடும்பத்தினர் காங்போக்பி என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
The post விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணி பெண்கள்; மணிப்பூரில் இன பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல் appeared first on Dinakaran.