இந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பல கட்டப் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், பல நிகழ்ச்சிகள் என அயராமல் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பக்க பலமாக இருந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. எனது தலைமையில் இந்த மூன்றாண்டுகளில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு என்னால் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் அனைவரும் பயணித்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி இன்றுடன் முடிந்தாலும் கூட அதன் மேல் இருக்கின்ற அன்பும் பற்றும் என்றும் குறையாது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்தி அவரை பிரதமர் ஆக்குவதே நமது லட்சிய இலக்காக கொண்டு தொடர்ந்து பயணிப்போம். புதிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post ஒற்றுமையுடன் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே நமது லட்சிய இலக்கு: இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் அறிக்கை appeared first on Dinakaran.