மெட்ரோ கான்கிரீட் விழுந்த விபத்தில் உயிரிழந்தவருக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் நிவாரணம் 

சென்னை: ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் உயிரிழந்த ரமேஷ்க்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கட்டுமானம் பணிகளை மேற்கொள்ளும் எல் அண்ட் டி நிறுவனமும் இழப்பீடுகளை வழங்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் பாலப் பணியின்போது இணைப்பு தூண்கள் விழுந்து ரமேஷ் (42) என்பவர் உயிரிழந்துள்ளார். பாலத்தை இணைக்கும் தூண்களை பொருத்த முயன்றபோது திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மெட்ரோ கான்கிரீட் விழுந்த விபத்தில் உயிரிழந்தவருக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் நிவாரணம்  appeared first on Dinakaran.

Related Stories: