ஒன்றிய அரசை கண்டித்து ஜூன் 18ல் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிவிப்பு

சென்னை: தமிழ் மக்களின் வரலாற்றை மூடி மறைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஜூன் 18ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். கீழடி அகழாய்வு குறித்து ஆதாரங்களை சரியாகத் தந்தும் தடுத்து நிறுத்துவதன் பின்னணி என்ன?. ஒன்றிய அரசை கண்டித்து ஜூன் 18ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்தார். கீழடி ஆய்வு முடிவுகளை அறிவிக்க மறுப்பது ஒன்றிய பாஜக அரசின் உண்மையான மனநிலையை காட்டுகிறது. சிந்துவெளி நாகரிகத்துக்கு சரஸ்வதி பெயரை சூட்டத் துடியாத் துடிக்கிறது ஒன்றிய அரசு. என்ன ஆதாரம் இல்லை, கீழடி ஆய்வில்? என்று ஒன்றிய பாஜக அரசுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஜூன் 18ல் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: