கோவை: வாகன சோதனையின் போது லத்தியால் தாக்கியதில், படுகாயம் அடைந்தவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வாகன எண்ணை குறித்து வைத்து நடவடிக்கை எடுக்கலாம்; லத்தியால் தாக்கியது மனித உரிமை மீறல் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கோவையில் காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்கியதில் கீழே விழுந்து கால் நடக்க முடியாமல் போனதாக சர்தார் அலி என்பவர் புகார் அளித்ததின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
The post வாகன சோதனையின் போது காவல் ஆய்வாளர் தாக்கியதாக புகார்: ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் பரிந்துரை appeared first on Dinakaran.