இதனால் பஸ் பாஸ் வழங்குவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டன. இதை தவிர்க்க போக்குவரத்து துறை, பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் எமிஸ் இணையதளம் வழியாக மாணவர்களின் பெயர் விவரங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயண அட்டையை வழங்க திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விவரங்களை அந்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாக பயண அட்டை தேவையா, வேண்டாமா என விருப்பத்தை தெரிவித்தால் போதுமானது.
அதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளுக்கு இலவச பயண அட்டையை வழங்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பயணியர் மற்றும் பொருள் போக்குவரத்து கழகம் ஒருங்கிணைந்து இந்த பணியை செய்து வருகிறது. இந்த வருடம் சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
The post எமிஸ் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு பஸ் பாஸ் appeared first on Dinakaran.