ஜூன் 2ம் தேதி வழங்கப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

 

பெரம்பலூர்,மே.28: பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (28ம்தேதி) நடைபெறவுள்ளது. சப். கலெக்டர் கோகுல் தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பெரம்பலூர் சப்.கலெக்டர் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், பெரம்பலூர் மதரசா சாலையில் உள்ள, சப் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 28ம்தேதி காலை 11மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
எனவே பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது தேவைகளை, கோரிக்கை மனுவாக பெரம்பலூர் சப்.கலெக்டரிடம் வழங்கி பயன்பெறலாம் என சப்.கலெக்டர் கோகுல் வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

The post ஜூன் 2ம் தேதி வழங்கப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: