ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பிரன்னாய் வெற்றி

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத், ஜப்பான் வீரர் கே.நரோகா மோதினர். இப்போட்டியில் முதல் செட்டை ரஜாவத் கைப்பற்றினார். 2வது செட் நரோகா வசம் சென்றது. வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டையும், அவரே கைப்பற்றினார். அதனால், 14-21, 21-10, 21-14 என்ற செட் கணக்கில் வென்ற நரோகா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரன்னாய்,19-21, 21-16, 21-14 என்ற புள்ளிக்கணக்கில், டென்மார்க் வீரர் ராஸ்மஸ் கெம்கேவை வென்றார்.

The post ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பிரன்னாய் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: