இதில் சில கண்டெய்னர்கள் நேற்று முன்தினம் ஆலப்புழா மற்றும் கொல்லம் அருகே கரை ஒதுங்கின. இவற்றில் பெரும்பாலானவை காலியாகவே காணப்பட்டன. அதில் இருந்த பொருட்கள் கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று சில கண்டெய்னர்கள் திருவனந்தபுரம் அருகே அயிரூர், வர்க்கலா, இடவா, அஞ்சுதெங்கு ஆகிய பகுதிகளில் கரை ஒதுங்கின.
இவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் நாட்களில் மேலும் பல கண்டெய்னர்கள் கரை ஒதுங்கலாம் என்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கொச்சி அருகே மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்கள் திருவனந்தபுரத்திலும் கரை ஒதுங்கின appeared first on Dinakaran.