பெரம்பலூர்,மே 27: அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தில் பணிபுரிந்த ராஜா பெரியண்ணன் (ஓட்டுநர்) என்பவர் கடந்த 2024ம் ஆண்டு வேலை சார்ந்த பயணத்தின் போது சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு மாதம் ரூ.21545, சார்ந்தோர் உதவித்தொகையாக வழங்குவதற்கான ஆணையை சேலம் இ.எஸ்.ஐ துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குனர் சிவராமகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் துணை இயக்குநர் தினேஷ்குமார் ஆணைபிறப்பித்தார்.
இதையடுத்து இ.எஸ்.ஐ திருச்சி கிளை மேலாளர் ரேவதி அந்த ஆணையை மறைந்த ராஜாவின் குடும்பத்திற்கு வழங்கினார். அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர்கள் கேஆர்வி கணேசன், செல்வகுமாரி கணேசன், மனித வளத்துறை அதிகாரி மணிபாரதி மற்றும் இ.எஸ்.ஐ ஊழியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூரில் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன ஊழியருக்கு இ.எஸ்.ஐ உதவித்தொகை appeared first on Dinakaran.