2 பெண்கள் மாயம்

 

ஈரோடு, மே 27: ஈரோடு மாவட்டம் கடம்பூர் காடகன்நள்ளியை சேர்ந்தவர் ஜடைசாமி (33). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி (36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 19ம் தேதி ராணி சத்தியமங்கலத்திற்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் ராணி கிடைக்கவில்லை. இது குறித்து ஜடைசாமி கடம்பூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராணியை தேடி வருகின்றனர்.

இதேபோல், நம்பியூர் கோசனம் தித்தம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகள் ரூபினி (22). பிஎஸ்சி ரேடியாலாஜி படித்து விட்டு, கோபியில் உள்ள ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகாதவர். கடந்த 24ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் ரூபினி கிடைக்கவில்லை. இது குறித்து ஈஸ்வரன் அளித்த புகாரின்பேரில், நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான ரூபினியை தேடி வருகின்றனர்.

 

The post 2 பெண்கள் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: