பவானி ரோட்டில் உள்ள டீ கடையில் திருட்டு

 

அந்தியூர், மே 26: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பச்சாபாளையம் சித்திரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (45). இவர் அந்தியூரில் இருந்து பவானி செல்லும் ரோட்டில் டீக்கடை வைத்துள்ளார். கடந்த 24ம் தேதி இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இதையடுத்து, நேற்று காலை வந்து பார்த்த போது டீக்கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு பக்கம் தூக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சிகரெட் பண்டல்கள் மற்றும் பணம் ரொக்கம் ரூ.2 ஆயிரம் என ரூ.12 ஆயிரம் மதிப்புலான பொருட்கள் திருட்டுப் போயிருந்தது. இது குறித்து அந்தியூர் போலீசில் விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பவானி ரோட்டில் உள்ள டீ கடையில் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: