விசாரணையில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழகாடுவெட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த சந்திரகுமார் (33) என்பதும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல முகமூடி கொள்ளையன் என்பதும், இவர் மீது வீடு, கடைகளை உடைத்து கொள்ளையடித்தல், பைக்குகள் திருட்டு என 70க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து, 3 டூவிலர்கள், அரிவாள், கடப்பாறை, ஸ்குரு டிரைவர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
The post 70 வழக்குகளில் தேடப்பட்ட முகமூடி கொள்ளையன் துப்பாக்கி முனையில் அதிரடி கைது appeared first on Dinakaran.