அப்போது வீட்டில் இருந்த எடப்பாடியிடம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து மோப்ப நாய் ரூபியும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.