திருப்புவனம் பகுதியில் நாளை ‘பவர் கட்’

 

திருப்புவனம், மே 25: திருப்புவனம் பகுதியில் உள்ள நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
திருப்புவனம் நெல்முடிகரை துணை மின்நிலையம், திருப்பாச்சேத்தி, பூவந்தி, பொட்டப்பாளையம் ஆகிய நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (மே 26) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்புவனம், புதூர், அல்லிநகரம், நைனார்பேட்டை, கீழராங்கியம், மேலராங்கியம் மடப்புரம், வடகரை, பூவந்தி, அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பைக்குடி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், லாடனேந்தல்,திருப்பாச்சேத்தி, மேலச்சொரிக்குளம், பழையனூர், வெள்ளிக்குறிச்சி, ஆவரங்காடு, வேளாங்குளம், கீழராங்கியம், மேலராங்கியம், பொட்டப்பாளையம், கீழடி, கொந்தகை, செங்குளம், முக்குடி உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என மானாமதுரை மின் செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

The post திருப்புவனம் பகுதியில் நாளை ‘பவர் கட்’ appeared first on Dinakaran.

Related Stories: