ஈரோடு, மே 25: கோபி அடுத்த மொடச்சூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக, கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதேப்பகுதியைச் சேர்ந்த சேகர் (48) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
The post மது விற்றவர் கைது appeared first on Dinakaran.