பொன்னமராவதி, மே 23: பொன்னமராவதி அருகே காரையூரில் இன்று வடமஞ்சுவிரட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் காரைக்கண்மாயில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வடமஞ்சுவிரட்டு போட்டி நடக்கிறது. இதையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெறும் விழாத்திடலில் முகூர்த்தக கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த வடமஞ்சுவிரட்டில் 14 காளைகள் மற்றும் 9 பேர் கொண்ட 14 குழு மாடுபிடிவீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர். மேலும் நாளை சுந்தரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
The post காரையூரில் இன்று வடமாடு மஞ்சுவிரட்டு appeared first on Dinakaran.