ரூ.2000 கோடி மதிப்பு பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை: அரசு அறிவிப்பு

சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 27ம் தேதி நடத்தப்படும்.

போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 27ம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post ரூ.2000 கோடி மதிப்பு பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: