ஆஸி.யில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் பலி, 2 பேர் மாயம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்கிழமை முதல் கனமழை பெய்து வருகின்றது. சில இடங்களில் 24 மணி நேரத்தில் இதன் காரணமாக பல இடங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிட்னிக்கு வடக்கே நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வெள்ள அவசர நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மழை பொழிவு நீடிக்கும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் சுமார் 30 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் சுமார் 50ஆயிரம் பேர் வெளியேறுவதற்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே நியூ சவுத் வேல்ஸில் உள்ள மோட்டோவில் வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்து 63வயது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று காலை ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பேர் மாயமாகி உள்ளனர்.

The post ஆஸி.யில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் பலி, 2 பேர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: