ஜூன் 13க்குள் விண்ணப்பிக்கலாம் சாத்தூர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

சாத்தூர், மே 22: சாத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், கம்மியர், மோட்டார் வண்டி, எலெக்ட்ரிசியன், சோலார் டெக்னாலஜி, ஃபயர் டெக்னாலஜி போன்ற பிரிவுகளிலும் மேலும் தமிழக அரசு மற்றும் டாட்டா கன்சல்டன்சி உடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் டெக்னிசியன், மேனுஃபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், அட்வான்ஸ்டு சி.என்.சி மிஷினிங் டெக்னிசியன் ஆகிய மூன்று தொழில் பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் வகுப்பு அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.750 வழங்கப்படும். தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியருக்கு தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், இலவச சீருடை மற்றும் அரசு வழங்கும் ஏனைய இலவச பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும். மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளது. ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 13.06.2025. இத்தகவலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சைலஸ் லவ்லி டாம் தெரிவித்துள்ளார்.

The post ஜூன் 13க்குள் விண்ணப்பிக்கலாம் சாத்தூர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: