கந்தர்வகோட்டை புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

கந்தர்வகோட்டை, மே 22: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக கலைவாணி பொறுப்பேற்றுக் கொண்டார். கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் சுகுமார் புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், கந்தர்வக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, ஆய்வாளர் கலைவாணி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, உதவி ஆய்வாளர்கள், காவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

The post கந்தர்வகோட்டை புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: