சூறாவளி காற்று மழையால் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

தஞ்சாவூர், மே 22: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வழுத்தூர் கிராமத்தில் கொடிக்கால்பள்ளம் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (63). விவசாயி. இவரது மனைவி குழந்தையம்மாள் (58). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பசு மாடு கன்று ஒன்றை ஈன்றது. இந்நிலையில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பசுமாட்டை தேடி சென்ற போது, கொடிக்கால் பள்ளம் தெருவில் பின்புறம் உள்ள வாய்க்காலில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி ரூ.50 ஆயிரம் மதிப்புடைய பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மாட்டை அகற்றப்பட்டது. அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பி சரி செய்யப்பட்டு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் மூலம் உடல்கூறாய்வு செய்யப்பட்டது. பசுமாடு இறந்ததை பார்த்து பசுங்கன்று அங்கும் இங்கும் அலைந்த காட்சி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ்குமார், பாபநாசம் தாசில்தார் பழனிவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

The post சூறாவளி காற்று மழையால் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பசுமாடு பலி appeared first on Dinakaran.

Related Stories: