சிவகங்கையில் பாறை விழுந்து 5 பேர் பலி எதிரொலி; தமிழகம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும்: கனிம வளத்துறை இயக்குனர் உத்தரவு

சென்னை: சிவகங்கை மாவட்டம், மல்லாங்கோட்டை கிராமத்தில் தனியார் கல்குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொண்டதோடு அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கி இருந்தார். இந்நிலையில், 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கனிமவளத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை மாவட்ட அளவிலான கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தனியார் உள்பட அனைத்து குவாரிகளையும் உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். முறையாக குவாரிகளை பின்பற்றுதல், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை, கனிமவளத்துறை வழிக்காட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்டவைகள் குறித்து கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும்.

இதுகுறித்தான விரிவாக அறிக்கை அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி ஆய்வு மேற்கொண்டு முழு அறிக்கையை தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சிவகங்கையில் பாறை விழுந்து 5 பேர் பலி எதிரொலி; தமிழகம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும்: கனிம வளத்துறை இயக்குனர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: