முன்னாள் அதிபர் பைடனுக்கு 2014ம் ஆண்டு பரிசோதனையில் புற்றுநோய் கண்டறியப்படவில்லை

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஞாயிறன்று அறிவிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் இருந்தபோது பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்திருக்க கூடும் என்றும் திட்டமிட்டு இந்த விவகாரம் மறைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டனர். இந்நிலையில் முன்னாள் அதிபர் பைடனின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014ம் ஆண்டு பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிதலுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post முன்னாள் அதிபர் பைடனுக்கு 2014ம் ஆண்டு பரிசோதனையில் புற்றுநோய் கண்டறியப்படவில்லை appeared first on Dinakaran.

Related Stories: