ஆனால் அதில் உண்மையில்லை. பொற்கோயில் வளாகத்திற்குள் வான்பாதுகாப்பு அமைப்பு உள்பட எந்த ராணுவ தளங்களும் பயன்படுத்தப்படவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, பொற்கோயிலின் கூடுதல் தலைமை பூசாரி மற்றும் சீக்கியர்களின் உச்ச மத அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறுகையில்,’ பொற்கோயிலில் இந்திய ராணுவத்திற்கு வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை பயன்படுத்த எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் ஏற்பட்ட போது மின் விளக்குகளை அணைப்பது குறித்து மட்டுமே ராணுவம் தங்களைத் தொடர்பு கொண்டது.
நிர்வாகப் பொறுப்பின் நலனுக்காக முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது’ என்று தெரிவித்தார். பாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய டிரோன் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, கோவிலுக்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை நிலைநிறுத்த ராணுவம் அனுமதிக்கப்பட்டது உண்மையல்ல என்று பொற்கோயிலின் கூடுதல் தலைமை பூசாரி கியானி அமர்ஜித் சிங் கூறினார். இந்த கூற்று அதிர்ச்சியூட்டும் வகையில் பொய்யானது என்றார்.
The post ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததா?… பரபரப்பு விளக்கம் appeared first on Dinakaran.