அப்போது கனிமொழி எம்பி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா பாகிஸ்தான் இடையே, நடைபெற்ற பிரச்சனைகள் தொடர்பாக, நமது நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பாகவும், தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் பேசுவதற்கும், தீவிரவாத செயல்களால் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி கூறுவதற்கும், இந்திய அரசு, பல நாடுகளுக்கு நமது நாட்டின் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறது. ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கிறோம். இதற்கு இந்திய அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
The post இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை நமது நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு : உலக நாடுகளுக்கு புறப்பட்ட கனிமொழி பேட்டி appeared first on Dinakaran.