ஆரணியில் உள்ள சேவூர் ராமசந்திரன் வீடு மட்டுமின்றி அவரது மகன்கள் சந்தோஷ் குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்த நிலையில், சேவூர் ராமசந்திரன் வீட்டுக்கு முன்பாக அதிமுகவினர் திரண்டனர். அப்போது அவர்களில் ஒருதரப்பினர் தனியாக முழக்கங்களை எழுப்பியதால், மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியில் 2016-2021 வரை இந்து சமயத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சேவூர் ராமசந்திரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் வருமானத்துக்கு அதிகமாக 125% அளவுக்கு அதாவது ரூ.8 கோடி சொத்து குவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச்சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் சேவூர் ராமசந்திரன், அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் சோதனை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு appeared first on Dinakaran.