பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அன்புமணி புறக்கணித்துள்ளார். தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் இளைஞரணி கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.