பெரம்பலூர் மே 17: பெரம்பலூரில் செயல்பட்டு வரும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பயிற்சி நிலையத்தில், 2025-26ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், இணையவழி மூலம் வழங்கப்பட்டு, கடந்த 15ம் தேதி முதல் வரும் ஜூன் 20ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் சேர்வதற்கு 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
மாணவர் சேர்க்கைக்கான குறைந்த கல்வித் தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற இளங்கலை பட்டதாரிகள் அல்லது பத்தாம் வகுப்பு மூன்றாண்டு பட்டயப் படிப்புக்கு பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.20,750 என மொத்தம் ரூ.20850 கட்டணத்தை இணைய வழியில் ஒரே தவணையாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை வரும் ஜூன் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பயிற்சி நிலையத்தில் முழுநேர பட்டய பயிற்சி தொடக்கம்: இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.