சாத்தூர், மே 17: சாத்தூர் மற்றும் சுற்றுப் பகுதியில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் இரவு நேரத்தில் வெப்பம் அதிகரித்து புழுக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று காலை 6 மணி முதல் வெயில் அனலாக சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் பலத்த இடி, மின்னல், சூறை காற்றுடன் கனத்த மழை பெய்தது. சூறை காற்றில் சாத்தூர் நகர், சிதம்பரம் நகர், பெரியார்நகர் ஆகிய பகுதியில் இருந்த பிளக்ஸ் பேனர்கள் காற்றில் பறந்தன. கே.கே. நகர் பகுதியில் மின் கம்பம் சாய்ந்தது. இதனால் பெரியார் நகர், பைபாஸ் சாலை, கே.கே. நகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு மின் கம்பத்தை மின் வாரியத்தினர் சரி செய்தனர்.
The post சூறைக்காற்றுக்கு மின்கம்பம் சாய்ந்தது appeared first on Dinakaran.