ஆர்.எஸ்.மங்கலம் அருகே 13 வருடங்களாக 100 சதவீத தேர்ச்சி: அசத்தும் அரசு பள்ளி

ஆர்.எஸ்.மங்கலம். மே 17: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெட்டுக்குளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வெட்டுக்குளம், சித்தூர்வாடி, சேந்தனேந்தல், பேரையூர், கண்ணாரேந்தல், கலங்காபுளி, பாரனூர், அடர்ந்தனார் கோட்டை உள்ளிட்ட சுற்றுபுற கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 24 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அனைவருமே தேர்ச்சியடைந்து பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி அளவில் 485 மதிப்பெண்கள் பெற்று அபிமன்யூ என்ற மாணவர் முதலிடமும், 437 மதிப்பெண்கள் பெற்று கமலீஸ்வரி என்ற மாணவியும், அன்பு பாண்டியன் என்ற மாணவர் 2ஆம் இடமும், 409 மதிப்பெண்கள் பெற்று நேக என்ற மாணவி 3 ஆம் இடமும் பெற்றுள்ளனர்.

இப்பள்ளி கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நூறு சதவீதம் தேர்ச்சியடைந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இப்பள்ளி குக்கிராமத்தில் அமைந்திருந்தாலும் பள்ளி வளாகம் பசுமை நிறைந்த இயற்கை அழகுடனும், அருமையான சுற்றுசூழலுடனும் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள் இங்கு படிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக 100%. தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி சாந்திதேவி வாழ்த்து தெரிவித்தார். மேலும் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இப்பள்ளியை, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே 13 வருடங்களாக 100 சதவீத தேர்ச்சி: அசத்தும் அரசு பள்ளி appeared first on Dinakaran.

Related Stories: