திருப்புவனம், மே 17: மதுரையிலிருந்து நேற்று முன்தினம் மாலை பலசரக்கு பொருட்களுடன் சரக்கு வாகனம் புறப்பட்டு, திருப்புவனம் நோக்கி சென்றது. வேனை மதுரையை சேர்ந்த பிரதீப் குமார் ஓட்டினார். தட்டான்குளம் அருகே சென்றபோது, லாரியை சரக்கு வாகனம் முந்த முயன்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்தது. திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.