மின்சாரம் தாக்கி விவசாயி பலி

உசிலம்பட்டி, மே 17: உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் சுருளி ஆண்டவர் (39). விவசாயியான இவர் நேற்று தனது தோட்டத்தில் மோட்டரை இயக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். பலியான சுருளி ஆண்டவருக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

The post மின்சாரம் தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Related Stories: