டூவீலர் விபத்தில் தொழிலாளி படுகாயம்

வேடசந்தூர், மே 17: வேடசந்தூர் அருகேயுள்ள கூம்பூர் புது அழகாபுரியை சேர்ந்தவர் ராசப்பன் (65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் மோலகவுண்டனூரில் இருந்து குருவனூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். மோலகவுண்டனூர் அருகே வந்த போது குஜிலியம்பாறை குருவனூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த வேன் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராசப்பனை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராசப்பனின் மனைவி செல்லம்மாள் அளித்த புகாரின் பேரில் கூம்பூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் தொழிலாளி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: