மீண்டும் அதிகரித்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ. ரூ.69,760க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதன்படி, இந்தாண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் மீதான விலை ஜெட் வேகத்தில் ஏறி வந்தது. குறிப்பாக, அதிபர் டிரம்ப் பொறுப்பேற்ற பின், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறை அறிவிப்பு, ஈரான் நாட்டின் மீதான போர் அச்சுறுத்தல், அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப் போர் ஆகியவற்றால் தங்கம் விலை குறையாமல் அதிரடியாக உயர்ந்து ரூ.75 ஆயிரம் வரை சென்றது.

இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. அதன்படி நேற்று முன்தினம் (மே 15) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ரூ.68,880க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.8,610க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று (மே 16) மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கி உள்ளது. அதன்படி, சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.8,720க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு ரூ.108 ஆகவும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,08,000 ஆகவும் விற்பனையானது.

The post மீண்டும் அதிகரித்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: